தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Date:

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...