சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறை வெற்றிகரமாக நிறைவு !

Date:

இலங்கை தனது உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட்டதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதாக செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ கடனளிப்போர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆலோசனை நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் அளவுருக்களை இலங்கையால் நிறைவு செய்ய முடிந்தது.

இந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்த அனைத்து கடன் வழங்குநர்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சு மேலும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...