வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்!

Date:

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

புதிதாக நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.

அதற்கிணங்க, குறித்த நபர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்ததும் வெளியுறவுத்துறை அமைச்சர், நியமனங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...