தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்களும் அல்லது ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்காமல் இருத்தல் அல்லது குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் போன்ற காரணங்களுக்காக அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படாத அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான அலுவலர்கள் அல்லது ஊழியர்கள்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்தல் அல்லது அவ்வாறான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தாமல் இருக்குமாறு தாபனத் தலைவர்களுக்கும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தகைமை பெறாத நபர்களை தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க தூண்டுதலாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...