தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்களும் அல்லது ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்காமல் இருத்தல் அல்லது குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் போன்ற காரணங்களுக்காக அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படாத அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான அலுவலர்கள் அல்லது ஊழியர்கள்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்தல் அல்லது அவ்வாறான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தாமல் இருக்குமாறு தாபனத் தலைவர்களுக்கும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தகைமை பெறாத நபர்களை தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க தூண்டுதலாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...