ஐ.சி.சி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம், இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இருப்பினும் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால், இன்றைய போட்டியில் பிரமாண்ட வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது.
மறுமுனையில் இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை கண்டுள்ளதால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப கவனம் செலுத்துகிறது.