ஒரு கட்சி, வேட்பாளர், சுயேச்சைக்குழு செலவிடும் உச்ச தொகை அறிவிப்பு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு, கட்சியொன்று அல்லது வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் கொழும்பு (21 பேர்), கம்பஹா (22 பேர்) மாவட்டங்களில் ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு செலவிடக் கூடிய உச்சபட்ச தொகை கொழும்பு மாவட்டத்தில் ரூ. 7 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 756
(ரூ. 79,493,756) எனவும் கம்பஹா மாவட்டத்தில் ரூ. 8 கோடியே 17 இலட்சத்து 35 ஆயிரத்து 55 (ரூ. 81,735,055) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் முறையே ரூ. 114, ரூ. 110 தொகையை செலவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த தொகையாக வன்னி மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் ரூ. 82 இனை செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சமாக முறையே ரூ. 57 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 56 இலட்சத்து 43 ஆயிரத்த செலவிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் முறையே ரூ. 34,698, ரூ. 35,677 தொகையை உச்சபட்சம் செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...