ஒரு கட்சி, வேட்பாளர், சுயேச்சைக்குழு செலவிடும் உச்ச தொகை அறிவிப்பு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு, கட்சியொன்று அல்லது வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் கொழும்பு (21 பேர்), கம்பஹா (22 பேர்) மாவட்டங்களில் ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு செலவிடக் கூடிய உச்சபட்ச தொகை கொழும்பு மாவட்டத்தில் ரூ. 7 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 756
(ரூ. 79,493,756) எனவும் கம்பஹா மாவட்டத்தில் ரூ. 8 கோடியே 17 இலட்சத்து 35 ஆயிரத்து 55 (ரூ. 81,735,055) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் முறையே ரூ. 114, ரூ. 110 தொகையை செலவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த தொகையாக வன்னி மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் ரூ. 82 இனை செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சமாக முறையே ரூ. 57 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 56 இலட்சத்து 43 ஆயிரத்த செலவிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் முறையே ரூ. 34,698, ரூ. 35,677 தொகையை உச்சபட்சம் செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...