சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திப் பிரகாரம், இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை ஆதரிக்கும் வங்கி கிளைகளைக் குறிவைத்து லெபனானில் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன . பெய்ரூட் (Beirut) விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வங்கி கிளைகள், ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். “ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.