இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொலிஸ் தலைமையகம்

Date:

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் தலைமையகம் இன்று  (24) அறிவித்தலொன்றை  விடுத்துள்ளது.

அதன்படி  சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ என்பவரை 071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த விடயங்களுக்காக உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...