சத்திர சிகிச்சை நிபுணர்களை உடனடியாக அனுப்புமாறு சர்வதேச சமூகத்திடம் காசா சுகாதார அமைச்சு வேண்டுகோள்!

Date:

வடக்கு காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக அங்குள்ள நோயளர்களுக்கான சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்களை தீர்க்கும் வகையில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை குழுக்களை அனுப்ப சர்வதேச நிறுவனங்களுக்கு காசா சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ வளங்கள் முற்றிலும் நெருக்கடியில் இருப்பதால், சத்திர சிகிச்சை நிபுணர்களின் உதவியின்றி நிலைமையை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“கடுமையான காயங்களை கொண்டவர்களுக்கு விரைவான மருத்துவ உதவிகள்  வழங்கப்பட வேண்டும்; அதற்கு நிபுணர்கள் ஆதரவு இன்றியமையாதது” என்று காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இந்த மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகத்தின் உடனடி உதவி மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் காசாவிற்கு உதவ முன்வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...