2024 பொதுத்தேர்தல் கண்காணிப்புப் பணிக்கு தயாராகும் பெப்ரல்!

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்ற அமைப்புக்களில் பழமைவாய்ந்த அமைப்பான பெப்ரல் அமைப்பு, பொதுத்தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பணிகளை மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றது.

அந்தவைகயில் நாளை முதல் ஆரம்பிக்கப்படுகின்ற தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதிலிருந்து பொதுத்தேர்தலுடைய அனைத்து தேர்தல் விவகாரங்களையும் கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளை பூர்த்தி செய்து அதற்கான தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்கின்ற பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டி,வென்னப்புவ, ஆனமடுவ,சிலாபம், புத்தளம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கான கண்காணிப்பாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் நகரில் நடைபெற்றது.

வளவாளராக சட்டத்தரணி தினேஷ் பெரேரா கலந்துகொண்டு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

பெப்ரல் அமைப்பின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்ற ஏ.ஸீ.எம்.ருமைஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பெப்ரல் அமைப்பின் கள உத்தியோகத்தர் தரிந்து ஹேரத்தும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடாத்தினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...