மதம் தாண்டிய நெருக்கம்: தீபாவளியில் முஸ்லிம் பெண் செய்த உதவி

Date:

தீபாவளி பண்டிகைக்காக ரியா என்ற்  முஸ்லிம் பெண்ணொருவர்  இந்து சகோதர சகோதரிகளுக்கு உணவு மற்றும் புதிய ஆடைகளை வழங்கி மகிழ்வித்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் சென்னையில் பதிவாகியுள்ளது.

ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அழகான நிகழ்வாக, இந்த பெண்   இந்து சகோதரிகளுக்காக உணவு, பட்டாசுகள், புதிய ஆடைகளை வழங்கிய நிகழ்வு  பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வு, மதங்களின் எல்லைகளை தாண்டி மனிதநேயத்தால் பிணைக்கப்பட்ட ஒற்றுமையின் மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இரு மதத்தினரிடையே  பரிமாறப்பட்ட இதயம் கனிந்த அன்பும் பரிவும், சமூகத்தில் நல்லிணக்கத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியால், இரு சமூகங்களின் மக்களிடையே அன்பும் புரிதலும் மேலும் வலுப்பெறுவதுடன், அனைத்து மதங்களைத் தாண்டி ஒருமித்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

 

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...