இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்!

Date:

தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு துரித பதிலளிப்பு வழங்கல் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 0704 565 656 என்ற இலக்கத்தின் ஊடாக தட்டம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...