இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.