பாவித்த ‘மீன் டின்’ காலணியாக..! : காசா சிறுவர்களின் நிலை!

Date:

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் -காசா போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றது.

காசா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 41,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சிறுவர்கள்,பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்களும் அடங்குவர்.

சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்து படுகாயமடைந்துள்ளார்கள். காசாவில் வாழும் மக்கள் அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அந்தவகையில் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள 10 வயது சிறுமி அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கிறாள். பலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த சிறுமி, பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு, புதிய காலணிகளை வாங்க முடியாத சூழ்நிலையில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மீன் டின்’ மூலம் காலணிகளை தயாரித்து,  தனக்கு தேவையான காலணியை உருவாக்கியுள்ளார். இந்த சிறுமியின் முயற்சி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரச்சனைகளை எதிர்கொண்டு வழிவழியாக வாழும் காசா மக்களின் தன்னம்பிக்கை, திறமையை இச்சிறுமி அடையாளமாகக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதோடு, பலர் இதனை பாராட்டிப் பார்வையிட்டனர். இந்த நிகழ்வு, காசா மக்களின் உறுதி, தன்னம்பிக்கை, மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...