T20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி நியூஸிலாந்து அதிரடி வெற்றி

Date:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியானது 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் ஆரம்பமாகியுள்ள டி20 தொடரின் தொடக்கப் போட்டியில் இலங்கை அணியானது நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நியூஸிலாந்துக்கு வழங்கியது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், மத்தீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும், நுவான் துஷார 2 விக்கெட்டுகளையும் மற்றும் மகேஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

பின்னர் 109 என்ற இலகுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பத்தும் நிஸ்ஸங்க மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றார்.

நியூஸிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபடியாக கிளென் பிளிப்ஸ், லொகி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூஸிலாந்து 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக லொக்கி பெர்குசன் தெரிவானார், தொடரின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானர்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நவம்பர் 13 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...