தவணைப்பரீட்சை வினாத்தாளில் அரசியல் வினாக்கள்: கல்வி அமைச்சு விரைவான விசாரணை

Date:

களுத்துறை மாவட்ட  பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கான தொடர்பு இல்லை என்றும், குறித்த வினாத்தாள் அந்த பாடசாலையால் தயாரிக்கப்பட்டது என்றும் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர  அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்பான உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...