மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர்கள்: சிறந்த மாணவராக ஆஸாத் ஸிராஸ்!

Date:

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று (16) நிறைவுபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

கலாநிதி. அரபாத் கரீம் – பேருவளை
கலாநிதி. அஸ்லம் – தெல்தோட்டை
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் – புத்தளம்
கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் – புல்மோட்டை
கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் – கொழும்பு
கலாநிதி. ஸப்ரீனா – ஏறாவூர்

கலாநிதி. அரபாத் கரீம் பிக்ஹ் மற்றும் உஸுலுல் பிக்ஹ் துறையிலும்
கலாநிதி. அஸ்லம் ரிஸா சமூகவியல் மற்றும் மானிடவியல் துறையிலும்
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் உஸுலுத்தீன் மற்றும் மத ஒப்பீட்டாய்வு துறையிலும், கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையிலும், கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் வியாபார நிருவாகவியல் துறையிலும், கலாநிதி. ஸப்ரீனா கல்வித் துறையிலும் தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் Faculty of Islamic Revealed Knowledge and Human Sciences இனால் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விஷேட அம்சமாகும்.

தகவல்: மெஹமட் தெளபீக், அரசியல் விஞ்ஞானத் துறை, மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...