ஐபிஎல் ஏலம்: விலைக்கு செல்லாத வீரரை கேப்டனாக்கும் அதிரடி முடிவில் கொல்கத்தா!

Date:

புதிய IPL 2024 சீசனின் மேகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரஹானே, முதல் சுற்றில் தேர்வு செய்யப்படாத நிலையில், இரண்டாவது சுற்றில் 2 கோடி ரூபாயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் சேர்ந்தார்.

இந்த மாற்றத்தின் பிறகு, KKR அணியில் ஒரு முக்கியப் பொறுப்பை தாங்கவுள்ள ரஹானே, தற்போது அணியின் கேப்டனாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, KKR அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தனிப்பட்ட காரணங்களால் அணியை விட்டு விலகி பஞ்சாப் அணி இணைந்துள்ளார். இதனால், கேப்டன் பதவிக்கு புதிய தலைவரை தேடும் தேவை ஏற்பட்டது.

முதல் தவணையில், ரிங்கு சிங் கேப்டனாக பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ரிங்கு சிங் இதுவரை எந்த போட்டியிலும் கேப்டனாக விளையாடவில்லை. இந்த நிலையில், KKR நிர்வாகம் ஆண்ட்ரு ரஸில் மற்றும் சுணில் நரேன் போன்றexperienced வீரர்களையும் பரிசீலனை செய்தது. ஆனால், கடைசியில் ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு, ரஹானே KKR அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் எடுத்தார். அதன்பின், 2023 ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ரஹானே அபாரமான ஆட்டத்தை நிகழ்த்தி, CSK அணியின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரு முக்கிய வீரராக விளங்கினார்.

ரஹானே ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார். இதனால், அவர் KKR அணியின் கேப்டனாக சரியான தேர்வாக இருப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனோடு, ரஹானே தன் கெத்து அணியின் கேப்டனாக புதிய சீசனில் களம் இறங்குவார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...