துருக்கிய ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய செரண்டிப் நிறுவனம்

Date:

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற 4வது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்காட்சியி- 2024ல், துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்தூகானுக்கு செரண்டிப் அறக்கட்டளையின் சார்பாக, உலகளாவிய நிவாரண உதவிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ஆற்றிய பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாக  நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் இலங்கை உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) பங்கேற்றன.

இக் கண்காட்சி விசேடமாக பலஸ்தீனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் சர்வதேச மனிதாபிமான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அத்துடன் மனிதாபிமான உதவி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் தற்போதைய திட்டங்கள் பற்றிய விவரங்களும் கலந்து கொண்டோருக்கு காண்பிக்கப்பட்டன.

காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹைதர்பாசா” துறைமுகத்தில் கிட்டதட்ட 130 நாட்களாக நங்கூரமிட்டுள்ள “மாவி மர்மரா” கப்பலின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் விக்டன் கப்பலின் பணி குறித்தும் அர்த்தமுள்ள உரையாடல்களும் இக் காண்காட்சியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

தகவல்:
முஹம்மத் ஸுப்யான்
(Fb)

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...