பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Date:

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை பொறுப்பேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விசேட கருமபீடம், வார நாட்களில் மாலை 6 மணி வரையிலும் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 12 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உரிய தினத்திற்கு முன்னதாக செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...