பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Date:

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை பொறுப்பேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விசேட கருமபீடம், வார நாட்களில் மாலை 6 மணி வரையிலும் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 12 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உரிய தினத்திற்கு முன்னதாக செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...