பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Date:

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை பொறுப்பேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விசேட கருமபீடம், வார நாட்களில் மாலை 6 மணி வரையிலும் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 12 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உரிய தினத்திற்கு முன்னதாக செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...