இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

Date:

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 26 இலங்கையர்கள் கொண்ட அண்மைய குழு நேற்று மாலை (04) கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தது.

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...