இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

Date:

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 26 இலங்கையர்கள் கொண்ட அண்மைய குழு நேற்று மாலை (04) கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தது.

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...