ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல பத்திரிகை விளம்பரங்களில் செய்திகள் வெளியாகின. அவர் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.

எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் என எங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...