கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம் அவர்களுக்கு ‘கலாபூஷண விருது;!

Date:

இலங்கையின் கலைத்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் 39ஆவது வருடாந்த “கலாபூஷண அரச விருது விழா” அண்மையில் அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம். அக்ரம் அவர்கள், “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டியாந்தோட்டை கராகொடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி குருவிட சாஹிரா முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறந்த கல்விசேவையாற்றி, சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

கலைத்துறை மட்டுமல்லாது கல்வித் துறையிலும் அவரது  சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...