இந்திக்க தொட்டவத்தவிற்கு எதிரான ஜம்இய்யதுல் உலமாவின் வழக்கு, ஜனவரி 28 இல்..!

Date:

நபிகளாரை அவமானப்படுத்தும் விதத்தில் கடந்த வருடம் யூடியூப் பதிவொன்றை வெளியிட்ட இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இந்திக்க தொட்டவத்தவின் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வதற்கு வேண்டிக் கொண்டபோது இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டு சமரசப்படுத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் சொல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் யூடியூபில் பதிவிட்டுருந்தமையும் அதனைக் கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...