ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

Date:

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்க மேற்கொண்ட முதலாவது வெளி நாட்டு விஜயம் இதுவாகும்.

ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானமானது நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதன்பிறகு, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...