தேசிய அருங்கலைகள் பேரவைக்கு புதிய தலைவராக கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமனம்!

Date:

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

 

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...