அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு, புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தான நிகழ்வு மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது இரத்த தானம் கொடுப்பவர்களை கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னமும் வழங்கப்படும்.
இரத்த தானம் செய்ய விரும்பியவர்கள் 31.12.2024 செவ்வாய்கிழமைக்கு முன் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.