அரபு எழுத்தணியை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சி: மூதூரில் இரு நாள் பயிற்சி!

Date:

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

முக்கிய விருந்தினராக திருகோணமலை மாவட்ட “முஸ்லிம் எயிட்” ஒருங்கிணைப்பாளர் தாஸ்மின் சலீம் அவர்களும் வளவாளர்களாக அஷ்ஷெய்க் .ஜுனைத் நளீமி அவர்களும் அஷ்ஷெய்க் சில்மி நூரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சுமார் 11 மத்ரஸாக்களிலிருக்கு 33 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் இந்த அரபு எழுத்தணி சங்கத்தின் தலைவராக இருந்து இதனை வழி நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...