3வது T20 கிரிக்கெட் : 44 பந்தில் சதம் விளாசிய குசல் பெரேரா

Date:

குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான சதத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 218 ஓட்டங்களை குவித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது நியூஸிலாந்துடன் தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முன்னதாக நடைபெற்ற முதலிரு போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று (02) நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக அணித் தலைவர் சரித அசலங்க 24 பந்துகளில் 46 ஓட்டங்கள‍ை பெற்றார்.

இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...