கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துதனர்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே 36 வயதுடையவர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.