இஸ்லாத்தை அவமதித்த குற்றத்துக்கு ஞானசார தேரருக்கு 1500 ரூபா அபராதம்: 9 மாத சிறை

Date:

2016 ஆம் ஆண்டில் ‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என்று மேற்கோள் காட்டி வெறுப்புணர்வு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 9 மாத சிறைத்தண்டனையும் விதித்தது.

இன்று ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகின்ற நிலையில் கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற இல: 3இன் நீதிபதி தண்டனைச் சட்டத்தின் 291B கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்.

ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தேரரின் தேகாரோக்கியத்தை கருத்திற்கொண்டு தண்டனையை குறைத்து வழங்குமாறு வேண்டியிருந்தனர்.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்றும் அதனை அவர் துடைத்தெறிவார்’ என்றும் வெறுப்பு பேச்சு பரப்பியதன் பேரில் முஸ்லிம் சமூகத்திடமிருந்து பல முறைப்பாடுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கிருளப்பன பொலிஸாரால் நீண்டகால விசாரணையின் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை முன்னெடுத்திருந்தனர்.

 

 

 

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...