இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு சர்வதேச மக்கா குர்ஆனிய மன்றத் தலைவரால் வரவேற்பு

Date:

தற்போது இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில், செனவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பின் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ,முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருக்கான விருந்துபசாரமும் வரவேற்பும் மக்காவிலுள்ள சர்வதேச குர்ஆனிய நிறுவனத்தின் தலைவர் இலங்கையாரான அஷ்ஷெய்க். முஹம்மத் ரியாழ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வைபவத்தில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.அமீர் அஜ்வத் அவர்களும் கலந்துகொண்டார்.

மேற்படி தூதுக்குழுவினர் சவூதி அரேபியாவுக்ககான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே இந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதி அமைச்சர் முனீர் முழப்பரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ். எம்.நவாஸும் மக்காவில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...