நிட்டம்புவ தங்க நகைக்கடையில் 4 மில்லியனுக்கும் அதிகமாக கையாடிய முகாமையாளர் கைது!

Date:

நிட்டம்புவ New Swiss Gold House எனும் பிரபல நகைக்கடையின் முகாமையாளர், 46 இலட்சம் ரூபா பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நகைக்கடையில் 20 வருடங்களுக்கு முன்னர் விற்பனைப் பணியாளராக இணைந்து நிறுவனத்தின் முகாமையாளராக உயர்ந்த இவர் தவணை முறையில் நகை கொள்வனவு செய்தவர்களிடம் இருந்து பெற்ற கொடுப்பனவுகளை கையாடியிருப்பதாகவும் நிறுவனத்தின் visiting card ஐப் பயன்படுத்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தவறான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இது தவிர பில் எழுதும் நடவடிக்கைகளிலும் பல மோசடிகளில் இவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த முகாமையாளர் கம்பஹா விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட நாட்களாக மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை (8) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் வரையான காலப்பகுதியில் இவர் சிறிது சிறிதாக 46 இலட்சம் ரூபாவரை கையாடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த தங்க நகைக் கடையில் கடமையாற்றிய எம்.ஜே.எம். பஸீம் எனும் விற்பனைப் பணியாளரை 2024.06.14 ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தமது நிறுவனத்துக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் இவருடன் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் New Swiss Gold House முன்னதாக வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...