பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர்.
ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அடிப்படைக் கற்கைகள் நிலையத்தின் தலைவராக அஷ்ஷெய்க் கலாநிதி M J M அரபாத் கரீம் அவர்களும், அரபு மொழிகள் நிறுவனத்தின் (Institute of Arabic Language) தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஜே. இம்தியாஸ் அவர்களும் புறக்கிருத்திச் செயற்பாடுகள், திறன் விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் (Extra Curricular, Skill Development and Career Guidance Unit) அஷ்ஷெய்க் கலாநிதி A J M ஸிஹான் அவர்களும் நியமிக்கப்பட்டதோடு அஷ்ஷெய்க் கலாநிதி A.P.M அப்பாஸ் தலைமைகள் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.