நாட்டில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Popular

More like this
Related

பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத்...

அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 'அல் மயாடீன்' செய்தி...

36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப்...

தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு...