தலைசிறந்த மார்க்க அறிஞரான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

Date:

கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், கேரள நத்வதுல் முஜாஹிதீன் (KNM) பொதுச்செயலாளருமான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது மதனீ அவர்கள் சிறந்த எழுத்தாளரும் மார்க்க பிரச்சாரகரும், இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்.

கேரள மாநில ஹிலால் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்துள்ள முஹம்மது மதனீ அவர்கள் நீண்டகாலம் கோழிக்கோடு கலீபா மஸ்ஜித் இமாமாகவும் பணியாற்றியவர்.

புளிக்கல் மதீனத்துல் உலூம் மதரஸா, எடவண்ண ஜாமிஆ நத்வியா அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது இவர் உருவாக்கிய மாணவர்கள் தற்போது உலகின் பல பகுதிகளிலும் மார்க்க பணியாற்றி வருகின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் இம்மையின் நல்லறங்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனத்தை நிரந்தரமாக்குவானாக..

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...