இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

Date:

இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்பு மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இராணுவப்படைகளின் துணை பிரதானியாகவும், அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் பொதுப் பணியாளர் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.

இந்திய இராணுவ கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்லூரி ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் இரண்டாவது லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டு கஜபா படைப்பிரிவில் காலாட்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவ ஊடக பணிப்பாளராகவும் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...