இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

Date:

இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,  இன்று  விடுவிக்கப்பட உள்ள 3 பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது.

இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...