சூடான் உள்நாட்டுப் போர்: மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலி

Date:

சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

வடக்கு ஆப்பிரிக்க நாடானில் அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப்படையினர் பதுங்கி இருந்து செயற்படுவதாக அந்த நாட்டின் இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் இராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து எறிகணைகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாட்களாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2023 ஆரம்பித்த சண்டையிலிருந்து 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை வெள்ளை நைல் நதியைக் கடந்து தப்பிச் செல்ல முயன்ற கிராம மக்கள் மீது துணை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...