2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்:’பாகிஸ்தானை வீழ்த்தியது போதாது; இன்னும் அபாரமாக விளையாடியிருந்தால், சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம்’

Date:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் விளையாடுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றியில் விராத் கோஹ்லி குவித்த அபார சதமும் ஷ்ரெயாஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் அவர் ஏற்படுத்திய இணைப்பாட்டமும் முக்கிய பங்காற்றின.

சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னில் அவுட்டானார்.

வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்இ கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். இதன்மூலம், 42.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

‘நாங்கள் சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம், உறுதியான வெற்றியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் லெக்ஸ்பின்னர் அப்ரார் அகமது 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்ராரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரை எதிர்கொள்ளும் போது கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களின் முன்னணியை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த போட்டிகளில் மேலும் சிறந்து விளையாடும் நோக்கத்தில் அணியின் வீரர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஏற்கனவே, வங்கதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால்,  அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...