ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்: புகாரி தகிய்யா அறிவிப்பு

Date:

ஹிஜ்ரி 1446 (2025) ஆண்டுக்கான புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பிப்பதாக பேருவளை பைத்துல் முபாரக் வ தாருல் முஸ்தபா புகாரி தகிய்யா அறிவித்துள்ளது.

அல் ஹிஸாப் அல் பலகி வானிலை கணிப்பீட்டின் அடிப்படையில் 2025 மார்ச் 1ஆம் திகதி சனிக்கிழமை புனித ரமழான் மாதம் ஆரம்பமாகும் எனவும் ரமழான் மாதத்தின் முதலாம் இரவு இன்று பெப்ரவரி 28 வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஆரம்பமாகும் எனவும் பேருவளை புஹாரி தகிய்யா அறிவித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய பத்வா கவுன்சிலும் கணிப்பீட்டின் அடிப்படையில் ரமழான் மாதம் நாளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு ரமழான் மாதத்தை தீர்மானிப்பதற்கான பிறை பார்க்கும் மாநாட்டை இன்று (28) ஏற்பாடு செய்துள்ளது.

பிறைக் கண்டால் 011243 2110/ 011245 1245 /  077 735 3789 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பிறைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

வெற்றுக்கண்ணால் பார்க்கப்படும் பிறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பிறைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...