கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Date:

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் குவைத் கட்டிடத்தின் நிர்மாணப் பணியின் தொடக்க விழா இன்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த கட்டடத்திற்கான நிர்மாணப்பணிக்காக, பாடசாலையின் நலன்புரிக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிடுகு விற்பனை நடத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான நிதி திரட்டப்பட்டது. இதனூடாக கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு, இன்று கட்டடப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்விழாவில் களனி – கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம். தௌசீர், கம்பஹா வலய ஆசிரிய ஆலோசகர்கள், கிடுகுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...