சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்..

Date:

சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை, புனித நோன்பு ஆரம்பமாகும் என, சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பிறை தெரிந்ததையடுத்து, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமழான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.

( ஐ.ஏ. காதிர்கான் )

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...