இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா!

Date:

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் முகாமையாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக யால தேசிய பூங்காவில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பூங்காவிற்குள் உள்ள பல ஏரிக் கரைகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மழைக்கால நிலைமைகள் குறையும் வரை, யால தேசிய பூங்காவை இன்று (01) முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, யால மண்டல எண் 1 உடன் தொடர்புடைய கட்டகமுவ மற்றும் பலதுபன நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன.

யால தேசிய பூங்காவின் நுழைவாயிலில் உள்ள நிமலாவ பகுதியில் உள்ள பல வீதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு காரணமாக பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக யால சஃபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...