எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய சூத்திரத்திற்கு இணக்கம்

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்திற்கு எரிபொருள்ள விநியோகஸ்தர்கள் தங்களது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போது (04) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய சூத்திரத்தை செயல்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதன்படி புதிய சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், விநியோகஸ்தர்களின் யோசனைகள் குறித்து ஆராய எதிர்வரும் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் கொள்வனவாளர்களும் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை குறித்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் மார்ச் 18ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் தற்போது எரிபொருள் தொடர்பான பிரச்சினை இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய கூட்டுத் தாபன எரிபொருள் விநியோகஸ்தர்கள் இதுவரை பெற்று வந்த மேலதிக 3% கமிஷன் பணத்தை இடைநிறுத்தியமை தொடர்பில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகியதால் கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...