சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்

Date:

ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது.

இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பசுபிக் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இந்த சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பிலான போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் உள்ளூரிலும் பிராந்திய ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சட்டபீடங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றில் 20 அணிகள் சர்வதேச போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்றன.

ஹொங்கொங் செஞ்சிலுவை சங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி இன்றிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும்.

இப்போட்டியில் நீர்கொழும்பை சேர்ந்த ஹுஸ்னி ஸராப் ஆசிரியரின் புதல்வி  ஹம்னா அஸூர் போட்டியில் வாதிடுபவராக (Mooter) கலந்துகொள்கிறார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...