பெண் வைத்தியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

Date:

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணும் நேற்றிரவு இரவு கல்னேவவின் நிதிகும்பயாய பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபரான கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர், இன்று (13) அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கல்னேவ காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை பொலிஸார் மீட்டனர். சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...