பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்பது மானிடக் கடமை என்பதை உணர்த்திச் சென்ற தமிமுன் அன்சாரி: மூத்த சட்டத்தரணி பாரிஸ்

Date:

பாசிஷம், இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற எந்த வடிவிலும் இருக்கலாம். அதனை பக்கச்சார்பின்றி எதிர்த்து நிற்பது மானிடக் கடமை என்பதை தமிமுன் அன்சாரி அவர்கள் உதாரணங்களுடன் விளக்கினார் என மூத்த சட்டத்தரணி பாரிஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும்  தமிழ்நாடு சட்டமன்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் முன்னாள் எம். எல். ஏ சகோதரர் தமிமுன் அன்சாரி, அவர்கள் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு 10ஆம் திகதி விஜயம் செய்திருந்தார்.
இந்த சந்திப்பில் இந்தியா இலங்கைக்கு இடையேயான சமூக சமய அரசியல் வியாபாரம் பற்றியும் விஷேடமாக சேர சோழ பாண்டிய காலம் ஆரம்பித்து தென்னந்திய இலங்கை தொடர்பு பற்றியும் தமிழ் எவ்வாறு இனத்தால், மொழியால், உணர்வால், கொள்கையால், பண்பாட்டால், கலாசாரத்தால் எம்மை தமிழ் நாட்டு சமுதாயத்தோடு பிணைக்கிறது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் எவ்வாறு தென்னிந்தியாவில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றித்து வாழ்கிறார்கள் என்பது பற்றியும் திட்டமிட்ட முறையில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் பாசிஸ சக்திகள் தோற்றுப் போகின்றன என்பதையும் தமிமுன் அன்சாரி  விளக்கினார்.

பலஸ்தீன் காசாவாக இருக்கலாம் இந்தியாவின் அஸாமாக இருக்கலாம் இலங்கையின் முள்ளிவாய்க்காலாக இருக்கலாம் இந்த எல்லா இடங்களிலும் நடக்கும் மனித அவலத்தை, இனச்சுத்திகரிப்பை ஒரே மன நிலையில் எதிர்த்து வினையாற்றும் பக்குவம் தேவை என்றும் தமிமுன்  அன்சாரி அவர்கள் தமது அரசியல் செயற்பாடு குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை கோட்பாடு மற்றும் அதன் INDIA கூட்டணி இலங்கை பற்றியும் தெளிவாக விளக்கினார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...