தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு நடாத்தும் மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு

Date:

தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு இணைந்து நடாத்தும் ‘மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு’ எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி மாலை 5 மணி முதல் ஸ்ரீ இசிபதனாராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு தர்மசக்தி அமைப்பின் தலைவரும், அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம விருந்தினராக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கெளரவ விருந்தினர்களாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...