தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை இன்று நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்!

Date:

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையை ஆளும் கட்சியின் பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் (25) சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோன் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலைக்கான சூழ்ச்சியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர், தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா  அதிபர் பதவியிலிருந்த ஒருவரை விலக்குவதற்காக 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை நீக்கும் சட்டத்தின் கீழ் 8 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.

இதேவேளை, 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...